துளசி நிறைய சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள்! யார் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
ஆயர்வேதத்தில் சிறந்த மருந்தாக துளசி பார்க்கப்படுகிறது. துளசியை பச்சை இலையாகவோ அல்லது உலர்ந்த இலையாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
தற்போதைய மாறிய உணவுப் பழக்க வழக்கங்களில் கூட துளசியை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.
உலர்ந்த துளசியான பேசிலை பாஸ்தா மற்றும் சாண்ட்விச்சுகளில் கூட சுவைக்காக சேர்ப்பதை பார்க்கிறோம்.
அப்படிப்பட்ட துளசி எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி
துளசியின் பக்க விளைவுகள்
- துளசி ஒரு மணம் கொண்ட மூலிகையாகும். இது லாமியாசி குடும்பத்தைச் சேர்ந்தது. புதினா கூட இந்தக் குடும்பத்தை சேர்ந்த செடி தான்.
- துளசி தாய்மார்களின் கருச் சிதைவுக்கு வழிவகுக்கும். அதுமடுமின்றி, அதிக அளவில் துளசியை எடுத்துக் கொண்டால் அவை கருப்பை சுருக்கங்களுக்கு வழி வகுக்கும். இது மிகவும் ஆபத்தானது.
- துளசி இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் கூறியுள்ளன. ஆனாலும், சர்க்கரை நோய்க்கு வேறு சில ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் துளசியை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- துளசியையும் மற்ற மருந்துகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டால், உங்களின் இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போகக் கூடும். இது உங்கள் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும்.
- துளசியில் நம் உடலில் உள்ள இரத்தத்தை மெல்லியதாக மாற்றும் பண்புகள் உள்ளன.
- அலோபதி மருந்துகளை உட்கொள்ள விரும்பாதவர்களுக்கு துளசி ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே இரத்தம் உறைதல் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் துளசியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
துளசி இலைகளை மென்று உண்ணக் கூடாது என்பதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞான காரணம் என்னவென்றால், அதில் பாதரசம் உள்ளது.
இது உங்கள் பற்களை கறைபடுத்தும். அதேபோல் உங்கள் பற்களின் நிற மாற்றத்திற்கும் துளசி வழிவகுக்கும்.
மேலும், துளசி இலைகள் இயற்கையில் அமிலத்தன்மை கொண்டவை. அது பற்களின் எனாமலை பாதிக்கும்.