வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
அதிக வேகமாக சாப்பிடும் பழக்கத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அதனை மிகவும் வேக வேகமாக சாப்பிட்டு விட்டு தனது வேலைக்கு ஓடுகின்றனர்.
ஆனால் சில வினாடிகளில் சாப்பிட்டு முடிப்பவராக இருந்தால், பல விளைவுகள் ஏற்படுமாம். அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வேகமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்
அதாவது நமது மூளை நாம் சாப்பிடுவதை பதிவு செய்ய 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுமாம். நாம் அதற்கும் குறைவான நேரத்தில் சாப்பிட்டுவிட்டால், வயிறு நிரம்பியது என்ற சிக்னலை மூளை கொடுக்காதாம். இதனால் அதிகமாக சாப்பிடும் சூழ்நிலை ஏற்படும்.
வேகமாக சாப்பிடுவதால் வயிற்றுக்கு செல்லும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், வயிற்று உப்புசம், கேஸ், அசௌகரியம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிகப்படியான உணவுகளை உடைத்து சாப்பிடாத போது வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனும் அமில சுழற்சி பிரச்சனை ஏற்படுகின்றது.
சில தருணங்களில் வேகமாக சாப்பிடும் போது உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் மூச்சுவிட முடியாமல் போகலாம். ஆகவே உணவை சரியாக மென்று சாப்பிடவும்.
உணவை வேகவேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமாம். மேலும் இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு பிரச்சனையால் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
ஒரு வாய் உணவை 20-30 முறை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
ஸ்பூனை உபயோகித்து சாப்பிடும் போது அதனை கீழே வைத்துவிட்டு நன்கு மென்று சாப்பிடுங்கள்.
டிவி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது உபயோகிக்க வேண்டும். இவை நமக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துவதோடு, முழு மனதாக நம்மை சாப்பிட விடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |