ஸ்ருதிஹாசன் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினையா...மனைவியை பிரிந்த கமலால் எடுத்த விபரீத முடிவு?
தன்னுடைய காதலைனை ஏன் இன்னும் திருமணம் செய்ய வில்லை என்பது குறித்து முதல் முறை நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு திருமணத்தின் மீது பயமாக இருக்கிறது. அதனால் தான் திருமணம் பற்றி யோசிக்கவில்லை.
எனது அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது.

திருமணத்தில் நம்பிக்கை இல்லை....!
திருமணம் என்கிற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே இருக்கிறது.
அதனால் திருமணம் பந்தம் குறித்து நான் நிறையவே யோசித்து வருகிறேன். இருப்பினும் சாந்தனு என்னுடைய வாழ்க்கைக்கு வந்தவுடன் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நிறைய விடயங்கள் ஒத்துப்போகிறது. நான் இப்போது ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மனைவியை பிரிந்து வாழும் கமல் காரணமா?
இவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலகநாயகன் அவரின் மனைவியை பிரிந்து வாழ்வது தான் ஸ்ருதிஹாசனின் இந்த முடிவுக்கு காரணமா என்று தற்போது கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
