டீ குடித்தால் எடை குறையுமா அதிகரிக்குமா? நிபுணர் கொடுத்த பதில்
இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தேநீர் என்பது வெறும் பானம் அல்ல, அது ஒரு உணர்ச்சியின் வெளிபாடு.
காலையில் கண்களைத் தேய்த்து எழும் பொழுது ஒரு கப் தேநீர் பருகினால் தான் அன்றைய நாளை துவங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எடை அதிகரிப்பு பிரச்சினையுள்ளவர்கள் முதலில் தேநீர் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று தான் பலரும் அறுவுறுத்துவார்கள்.
எடை இழப்புக்கும் தேநீருக்கும் என்ன தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தோன்றும். உண்மையில், தேநீர் உண்மையில் எடையை அதிகரிக்குமா? என்ற கேள்விக்கு நிபுணர் ஒருவர் கொடுத்த விளக்கம். பொய்யான ஆரோக்கிய பலன்கள் கூறுபவர்களுக்கு பதிலாக அமைந்துள்ளது.
அந்த வகையில், டீ குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
எடை இழப்புக்கும் தேநீருக்கும் என்ன தொடர்பு?
தேயிலையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. மாறாக தேநீருக்கு கலந்து குடிக்கும் சர்க்கரையில் தான் பிரச்சினைகள் உள்ளன. ஏனெனின் டீ தயாரிக்கும் பொழுது சர்க்கரை மற்றும் முழு கொழுப்புள்ள பால் பயன்படுத்தப்படும் போது அங்கு அதிகப்படியான கலோரிகள் உள்ளன.
“ஒரு கப் தேநீரில் சுமார் 100 முதல் 110 கலோரிகள் இருக்கலாம்...” என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனுடன் பிஸ்கட், ரஸ்க், பப்ஸ் அல்லது அதனுடன் வேறு எந்த ஆரோக்கியமற்ற சிற்றுண்டியை சாப்பிடும் பொழுது எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்?
ஆரோக்கியமான உடலமைப்பை கொண்டிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 முறை தேநீர் குடிப்பார்கள். இது உங்களின் செரிமானம் முதல் நீரேற்றம் அளவு வரை தாக்கம் செலுத்தும்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் குடிப்பது சிறந்தது. தேநீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கிரீன் டீ, பிளாக் டீ அல்லது மூலிகை தேநீர் குடிக்கலாம். இது ஆரோக்கியமான பலன்களை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |