பிணங்களுடனும் உடலுறவு! அகோரிகளின் மர்மமான மருந்து மனித எண்ணெயா?
அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்து உண்டு. அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் கங்கை ஆற்றின் கரையில் வாழும் அசைவ சமய ஆன்மீகவாதிகள்.
அகோரிகள் பெரும்பாலும் இறுதிச்சடங்குகள் நடக்கும் இடங்களில்தான் இருப்பார்கள். சிலர் மக்களிடம் இருந்து விலகி குகைகளிலோ, காடுகளிலோ, பாலைவனங்களிலோ வாழ்வார்கள்.
இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர்.

இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. அதில் முக்கியமானது பிணங்களை சாப்பிடுவது மற்றும் அவற்றுடன் உடலுறவு வைத்து கொள்வது.
இதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அகோரிகளின் நம்பிக்கை
அகோரிகள் பெரும்பாலும் மஹாகாலனான சிவபெருமானையும் அவரின் அழிக்கும் துணையான காளியையும்தான் வணங்குவார்கள்.
ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு விதத்தில் திருப்திப்படுத்தவேண்டும்.ஆனால் சிவன் மற்றும் காளியை திருப்திப்படுத்துவது என்பது அனைவராலும் முடியாது.
அதனை அகோரிகளால் மட்டும்தான் செய்யமுடியும்.

காளியின் தேவைகள்
அகோரிகளின் நம்பிக்கை படி காளிதேவியை திருப்திப்படுத்துவது மது, இறைச்சி மற்றும் உடலுறவு ஆகும்.
இந்த மூன்றுமே சாதுக்களுக்கு தடை செய்யப்பட்டதாகும்.
இறைச்சி சாப்பிடுவது என்பது அனைத்தையும் சாப்பிடுவதற்கு சமம். அவர்களுக்கு இதில் எந்த எல்லையும் இல்லை அனைத்தும் ஒன்றுதான்.

எனவே அவர்கள் மனிதக்கழிவுகள், மனித சதைகளை தின்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கிறார்கள் ஆனால் ஒட்டு விதிவிலக்குடன்.
பிணங்களுடன் உறவு
அகோரிகளுக்கு மற்றுமொரு விசித்திரமான சடங்கு முறை உள்ளது. அதுதான் பிணங்களுக்கு மத்தியில் உறவு கொள்வது.
அகோரிகளின் நம்பிக்கைகளின் படி காளி உடலுறவில் திருப்தி எதிர்பார்ப்பதால் அவர்கள் அதற்கு பொருத்தமான பிணம் ஒன்றை தேடி அதனுடன் உறவு கொள்கின்றனர்.
அகோரியானவர் பிணத்துடன் உறவு வைத்துக்கொள்ளும்போது கூட கடவுளின் நினைவில் இருந்து விலகாமல் இருந்தால் அவர் சரியான பாதையில் செல்கிறார் என்று அர்த்தமாம்.

இவ்வாறு உறவு கொள்வது அவர்களுக்கு பல அற்புத சக்திகளை அளிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இரவு நேரத்தில் இறந்த உடல்களுக்கு மத்தியில் அவர்களின் சாம்பல்களுக்கு நடுவே இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கில் ஈடுபடுத்தப்படும் பெண் உடல் முழுவதும் இறந்தவர்களின் சாம்பல் பூசப்படும், மேளங்கள் முழங்க மந்திரங்கள் ஓத இந்த சடங்கு செய்யப்படுகிறது.
இந்த சடங்கில் ஈடுபடும் பெண் மாதவிடாய் காலத்தில் இருக்க வேண்டியது அவசியம். அதேசமயம் கட்டாயப்படுத்தி இந்த சடங்கை செய்யமுடியாது.
மற்றவர்களை வெறுப்பவர்கள் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பசு மற்றும் நாயுடன் உணவை பகிர்ந்து சாப்பிடுவது அவர்களுக்கு பிடிக்காது, மாறாக பிணங்களை எரிக்கும் இடத்தில் அமர்ந்து ஒரே கிண்ணத்தில் விலங்குகளுடன் உணவு உண்பார்கள்.விலங்குகள் தங்கள் உணவை அசுத்தப்படுதுவதாக அவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம் ஈசனை அடைவது மட்டும்தான்.
அகோரிகளிடம் மர்மமான மருந்துகள் - வியக்கும் விஞ்ஞானிகள்
அகோரிகளிடம் இருக்கும் மர்மமான மருந்துகள் உலகம் முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறது. விஞ்ஞானத்தால் கூட குணப்படுத்த முடியாத நோய்களை அகோரிகளால் குணப்படுத்த முடியும்.
இதனை அவர்கள் மனித எண்ணெய் என்று கூறுகிறார்கள்.
மனித உடல்களை எரிக்கும் போது அதிலிருந்து எடுக்கப்படும் பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது.

ஆனால் இந்த மருந்துகளை மருத்துவ நெறிமுறைகளை கருதி அவர்கள் சோதனை செய்ய அனுமதிப்பதில்லை.
அகோரிகளின் குணப்படுத்தும் சக்திகள் அவர்களின் தாந்திரீக சக்தியில் இருந்து கிடைக்கிறது. ஆனால் அவர்கள் இந்த சக்தியை எப்பொழுதும் தீயசெயல்களுக்காக பயன்படுத்துவதில்லை. தங்களை பார்க்க வருபவர்களின் உடலில் இருக்கும் நோய்களை தங்களுடைய சக்திகள் மூலம் ஈர்த்து குணப்படுத்த இவர்களால் முடியும்.
சில அகோரிகள் தாந்திரீக சக்திகளின் மூலம் சிவன் மற்றும் காளியை வழிபடும் போது தாங்கள் மேலும் சக்தியை பெறலாம் என்று நம்புகிறார்கள்