91 வயதிலும் நடிகையின் உட்சாக ஆரோக்கியம் - அவர் சொன்ன ஒரே இரகசியம் இது தான்
90 வயதை கடந்த பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், முதுமையிலும் தான் ஆரோக்கியமாக இருக்க என்ன காரணம் என்பதை தற்போது கூறி உள்ளார்.

தற்போது முற்காலத்தை போல இல்லை மனிதர்கள் ஒவ்வொருவரும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார்கள். இதை விட சாப்பிடக்கூடவும் சிலர் மறந்து விடுகிறார்கள். அப்படி இருக்க தற்போது 90 வயதை கடந்த பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தற்போது அவ்வளவு முதுமையிலும் ஆரோக்கியமாகவும் உ்ளளார்.

எம்.என்.ராஜம் அவர்கள், தனது ஏழு வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர். 1949-ல் 'நல்லதம்பி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானார். இவரது 'ரத்தக்கண்ணீர்' (1954) திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து. மேலும் இவர் கதாநாயகிகளுடன் வில்லியாக சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியாகிய 'வின்னர்', 'திருப்பாச்சி' போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் திரைத்துறையில் இவரது வாழ்நாள் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு இவருக்கு மதிப்புமிக்க கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை கொடுத்து கௌரவித்தது.

இவர், 91 வயதிலும் தான் இந்த அளவிற்கு புத்துணர்ச்சியோடு இருப்பது எப்படி என்பது பற்றி பல்வேறு மேடைகளிலும், பேட்டிகளிலும் பேசி உள்ளார் . அப்படி அவர் பகிர்ந்துகொண்டதன் படி இன்றைய தேதியில் பலரும் மகிழ்ச்சி என்ற பெயரில் மதுபானங்களை நாடுகிறார்கள் என்றும் மாறிவரும் வாழ்க்கை சூழலால் தூக்கம் உணவு போன்ற அனைத்துமே குளறுபடியாகிவிட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.

மேலும் “நான் 91 வயது வரை நிறைவோடு இருப்பதற்காக, தனியாக எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் என் இளம் வயதில், எங்களுக்கு இருந்த உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை அமைப்புகள்தான் இன்றைய என்னுடைய ஆரோக்கியத்துக்கு காரணமென நினைக்கிறேன். உதாரணமாக எங்கள் காலத்தில் இன்றைக்கு போல பொழுதுபோக்கு அம்சங்கள்கூட கிடையாது. வேலை, வேலை விட்டால் வீடு அவ்வளவுதான். அதிகபட்சம் மன மகிழ்ச்சிக்காக பீச் செல்வோம். மற்றபடி தனியே எதுவுமே செய்ததில்லை. ஆனால் இன்று எக்கச்சக்க பப், க்ளப் மோகங்கள்”
மேலும் “நான் எல்லாவற்றையும் பார்த்து, ஆண்டு அனுபவித்துவிட்டேன். என் கணவரோடு நான் எப்போதும் சண்டையிட்டதே இல்லை. 80ம் கல்யாணம் வரை கொண்டாடி மகிழ்ந்துவிட்டேன் சிறுவயதில் தேவையற்ற விஷயங்களில் எனது ஆற்றலை நான் செலவிடாமல் இருந்ததால்தான், இன்று என்னால் எனர்ஜியோடு இருக்க முடிகிறது. அதுதான் என் சீக்ரெட்” என மிகவும் பூரிப்புடன் அவர் கூறி உள்ளார்.

எம்.என்.ராஜம் போல, இளம்வயதில் நாம் நம் உடலையும், முதுமையில் நம் மனதையும் பார்த்துக் கொண்டேமேயானால், நிச்சயம் ஆரோக்கியமாக நம் முதுமையை நாம் எதிர்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |