சாயிஷாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஆர்யா மகள்.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே
திருமண கொண்டாட்ட வீட்டில் மகளுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட ஆர்யா- சாயிஷாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சாயிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் சாயிஷா.
இவர், வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை சாயிஷா.
இதனை தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருப்பார்.
அடுத்து, ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஆர்யாவை காதலித்து வந்தார்.
இவர்களின் காதலை வீட்டில் உள்ளவர்களிடம் கூறி இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தையொன்றும் உள்ளது.
அதன் பின்னர், சாயிஷா குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். சிம்பு நடிப்பில் வெளியாகிய பத்துதல திரைப்படத்தில் ரீ- என்றி கொடுக்கும் விதமாக ஒரு பாடலுக்கு மாத்திரம் குத்தாட்டம் போட்டியிருந்தார்.
இந்த நளினம் போதுமா?
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சாயிஷா தனது 4 வயது குழந்தை மற்றும் கணவருடன் ஆட்டம் போட்ட காணொளியை காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் இருந்து சென்றிருந்தாலும் சாயிஷாவின் இந்த நடனம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன் குழந்தை பிறந்த பின்னரும் ஆர்யா மனைவிக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமான வாழ்க்கை குறித்தும், “சாயிஷாவின் மகள் இவ்வளவு பெரிய பொண்ணாக மாறி வளர்ந்து விட்டாரா?” என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |