சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு?
சனியின் பார்வை வரும் 21ம் தேதி மாறப்போகும் நிலையில் எந்தெந்த ராசிகளுக்கு பொற்காலம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சி
நீதியின் கடவுளாக பார்க்கப்படும் சனிபகவான், தனது நிலையினை மாற்றும் போது, சில தாக்கத்தினை ஏற்படுத்துவார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அள்ளித்தரும் கிரகமான சனியை கேட்டாலே பலரும் பயப்படவும் செய்கின்றனர்.
இந்நிலையில் வரும் 21ம் தேதி சனிபகவான் நட்சத்திர பாதத்தினை மாற்றப் போகின்றார். தற்போது மீன ராசியில் பெயர்ச்சியடைந்து பயணித்து வரும் சனி, உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் நுழைவார். இதனால் சில ராசியினருக்கு பொற்காலம் ஆகும்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த கிரக நிலையின் மாற்றமானது சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துமாம். குறித்த ராசியில் ஏழரை சனியின் தாக்கம் ஏற்பட்டாலும், இந்த கிரகநிலையானது உடல்நலத்தினை மேம்படுத்துகின்றது.
நீண்ட காலமாக சரிசெய்ய முடியாமல் இருந்த சிக்கல்கள் தற்போது முடிவிற்கு வர உள்ளது. கடைசி சில மாதங்களாக தேங்கியிருக்கும் பணிகள், தடைகளை சந்தித்துள்ள பணிகள் அனைத்தும் முடிவிற்கு வர உள்ளது.

சிம்மம்
சிம்மா ராசியினர் எட்டாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி அதாவது அஷ்டம சனி தாக்கத்தில் இருக்கும் நிலையில் இந்த கிரகநிலை மாற்றம் சிறிது மாற்றத்தினை ஏற்படுத்தும்.
தொழிலில் சிறந்த முன்னேற்றம், வருமானம் கிடைக்கும். பணியிடங்களில் வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளிடத்தில் முழு ஆதரவையும் பெறுவார்கள்.

தனுசு
தனுசு ராசியினரைப் பொறுத்தவரையில் வெற்றி அவர்களின் பக்கத்திலே இருக்குமாம். சனி பகவான் மூன்றாம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைகின்றார்.
இதனால் தொழிலில் விருத்தி, நல்ல லாபம், பண வரவு பெறுவார்கள். அதுமட்டுமின்றி தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், வெற்றியும் தேடி வருகின்றது.

பரிகாரம் என்ன?
ஏழரை சனி அல்லது சனி திசை தாக்கத்தினால், மன உளைச்சல், நிதி நெருக்கடியினை சந்திப்பவர்கள் சில பரிகாரத்தினை செய்து தாக்கத்தினை சற்று குறைக்கலாம்.
தினமும் 'அனுமான் சாலீசா' தினமும் பாராயணம் செய்வதும், சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றினால் நன்மையை பெறலாம்.
சனி பகவானின் பூரண அருள் பெறுவதற்கு, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்பதை தினமும் கூற வேண்டும்.
மேலும், “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்குமாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |