சரிகமப : இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஷிவானி பாடிய பாடல்! அரங்கமே மெய்சிலிர்த்த தருணம்
சரிகமப வில் Grand Finale க்கு முன்னர் இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர்களின் Celebration Round இடம்பெற்றுள்ளது. அதில் தெய்வீக தன்மையுடன் ஷிவானி பாடிய மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale இன்று 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி முதல் போட்டியாளர் சுஷாந்திக்கா, இரண்டாவது போட்டியாளர் ஸ்ரீகரி, மூன்றாவது போட்டியாளர் சபேஷன், நான்காவது போட்டியாளர் சின்னு, ஐந்தாவது போட்டியாளர் ஷிவானி, ஆறாவது போட்டியாளர் பவித்ரா என ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தெரிவாகி உள்ளர்.

இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், இதில் யார் வெற்றி மகுடம் சூடுவார் என்பது யாருக்கும் கணிக்க முடியாத விடயமாகவே இருந்து வருகின்றது.

இன்று அதற்கான விடை கிடைத்துவிடும். இந்நிலையில் இறுதிச்சுற்றுக்கு முன்னர் Celebration Round இல் குலதெய்வத்துக்கு அருகில் நின்று ஷிவானி பாடிய மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |