சரிகமப - வில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் ஈழத்தமிழன்... நடுவர்களே உறைந்துபோன தருணம்
சரிகமப வில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேஷனின் 'அஞ்சலி அஞ்சலி' பாடலுக்கு நடுவர்களின் ரியாக்ஷன் சொல்ல வார்த்தை இல்லை என்பதை போல இருந்தது.
சரிகமப
சரிகமபவில் கடந்த வாரத்துடன் சாதாரண சுற்றுக்கள் நடந்த முடிந்தது. இந்த வாரம் மிகவும் பிரமாண்டமாக இறுதிச்சுற்றுக்கான முதல் போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பாகம் சனிக்கிழமை ஒளிபரப்பாகும். அந்த வகையில் நேற்றைய தினம் அதாவது 10.04.2025 அன்று பல போட்டியாளர்கள் பாடினார்கள். அதில் இருவருக்கு கோல்டன் பெர்போமன்ஸ் கிடைத்தது.
இன்று மீதியுள்ள போட்டியாளர்களின் பெர்போமன்ஸ் ஒளிபரப்பபடும்.
பொதுவாக இந்த சுற்றில் போட்டியாளர்கள் எவ்வளவு நன்றாக பாடினாலும் நடுவர்கள் மிகவும் நுணுக்கமாக கவனித்து தான் கோல்டன் பெர்போமன்ஸ் கொடுக்கின்றனர். நேற்று சிவானி மற்றும் பிரதீபாவிற்கு கோல்டன் பெர்போமன்ஸ் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேஷன் அஞ்சலி அஞ்சலி பாடலை பாடி இருந்தார்.
அதில் அவர் சங்கதி பாடும் போது நடுவர்களின் ரியாக்ஷன் சொல்ல வார்த்தை இல்லை என்பதை போல இருந்தது. இவருக்கும் கோல்டன் பாராட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று கோல்டன் பெர்போமஷ்ஸ் பெற்ற எல்லோரையும் மேடைக்கு அழைத்து அதில் ஒருவரை தான் இறுதிச்சுற்றின் முதல் போட்டியாளர் என அறிவிப்பார்கள்.
இது மக்கள் மத்தியில் சபேஷனுக்கு அதிக ஆதரவு கூறியிருக்கிறார்கள். நடுவர்களும் சிறப்பாக பாராட்டுகின்றனர். எனவே இவர் இறுதிச்சுற்றின் முதல் போட்டியாளராக தெரிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |