இங்கு போலவே எங்கும் அன்பு செலுத்துபவர்கள் யாழ் மக்கள்: பாடகர் ஶ்ரீனிவாஸ் புகழாரம்!
உலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் யாழ்ப்பாண மக்களைப் பார்க்கின்றோம் என தென்னிந்திய திரைப்படப் பாடகர் ஶ்ரீனிவாஸ் (Srinivas) குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் யாழ் மருத்துவ பீடத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மெல்லிசை என்ற இசை நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
அந்நிகழ்ச்சியில் பின்னணி இசையில் முக்கிய பாடகராக கலந்து பாடகர் ஶ்ரீனிவாஸ் கலந்துக்கொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், இசை நிகழ்ச்சியில் பாடியது குறித்த அனுபவங்களை பாடகர் ஶ்ரீனிவாஸ் ஐபிசி தமிழ் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில், ” சீ தமிழ் சரிகம போட்டி நிகழ்ச்சியில் இலங்கையின் உள்ளூர் கலைஞர்கள் பங்குபற்றியிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தரங்கினி என்ற பெண் மிக அருமையாக பாடுவார், அம்பாறை மாவட்டத்தின் விநாயகபுரத்தில் இருந்து சபேசன் என்ற போட்டியாரும் சிறந்த பாடகர்.
அதற்கு முதல் கில்மிஷா பங்குபற்றியிருந்ததுடன் மலையகத்தில் இருந்து அசானியும் பங்குபற்றியிருந்தார். இந்தமுறை மலையகத்தில் இருந்து சினேகா என்ற போட்டியாளர் பங்குபற்றியிருந்தார்.
இவர்களை போன்ற திறமைசாலிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்தியாவின் இசைக்கலைஞர்களுக்கு நிகராக இலங்கைக் கலைஞர்கள் பாடுகின்றார்கள் என்பது தான் மிக்க மகிழ்ச்சி.
ஈழத்தமிழர்கள் உலகின் பல இடங்களில் இருக்கின்றார்கள். அவர்கள் இங்கு போலவே அங்கும் அன்பு செலுத்துபவர்கள்.என தெரிவித்தார். பாடகர் ஶ்ரீனிவாஸின் நேர்காணலை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |