சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி!
வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளையும் மிகுந்த பொறுமையுடனும், நிதானத்துமடனும் கடந்து வரும் பாடகி சைந்தவி, சரிகமப Li'l Champs Season 5 மெஹா ஓடிசனுக்கு பெற்றோர் இன்றி தனியான வந்த போட்டியாளருக்காக செய்த நெகிழ்சியான செயல் இணையத்த்தில் பாராட்டுகளை குவித்து வருகின்றது.
பாடகி சைந்தவி
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்ததவர் தான் பாடகி சைந்தவி.

இவரை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2020ம் ஆண்டு தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் இவர்களது திருமண வாழ்க்கை மேலும், சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில், நீதிமன்றம் இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கிய செய்தியும் இணையத்தில் வைரலானது. விவாகரத்துக்கு பின்னரும் தனது மகளுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து வருகின்றார்.
சாதாரணமாக விவாகத்து பெற்ற பின்னர் யாராக இருந்தாலும் மனதளவில் பெரும் போராட்டங்களையும் உணர்வு ரீதியாக தாக்கத்தையும் அனுபவித்தே ஆகுவார்கள். இதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது.

ஆனால் இப்படி தான் பொறுமையாகவும் ஆளுமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த வாழும் உதாரணமாக பாடகி சைந்தவி திகழ்ந்து வருகின்றார்.
தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

இந்நிலையில், சரிகமப Li'l Champs Season 5 மெஹா ஓடிசனுக்கு பெற்றோர் இன்றி தனியான வந்த போட்டியாளருக்கு பாடகி சைந்தவி அக்காவாக மாறிய நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |