சரிகமப மேடையில் குட்டி அம்மனாக பாடிய போட்டியாளர்: கையெடுத்து வணங்கிய நடுவர்கள்
தங்கள் ஊரின் சிறப்பை காட்டி பாட சந்தர்பம் கொடுத்த சரிகமபவில் குட்டி அம்மனாக வந்து பாடிய போட்டியாளர் மஹதியின் காணொளி வெளியாகி உள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பை காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த வாரம் போட்டியில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை.
இதனை தொடர்ந்து இந்த வாரம் தங்களின் ஊர் திருவிழாவை நினைவில் கொண்டு பக்தி திருவிழா சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்கள் ஊர்த்திருவிழாவை கொண்டாடி பாடுவார்கள்.
இந்த நிலையில் போட்டியாளர் மஹதி பாடிய பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்துள்ளது. கீழே உள்ள காணொளியில் அதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
