குட்டீஸ்க்கு மிகவும் பிடித்த பன் தோசை... எப்படி செய்வது?
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் அதிமாக சமைக்கப்படுகின்றது.
அந்தவகையில் எப்போதும் ஒரே மாதிரியான தோசை சுட்டு சாப்பிவதற்கு பதிலாக ஒரு முறை இந்த முறையில் பன் தோசை செய்து பாருங்கள்.

இந்த முறையில் தேசை செய்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் மாத்திரமன்றி குட்டீசும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
தயிர் - 3/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலைகள் - 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெருங்காயம் - 1/4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 தே.கரண்டி
சமையல் சோடா - 1/4 தே.கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் 1 கப் ரவை மற்றும் 3/4 கோப்பை தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ரவை தயிரில் உள்ள திரவம் முழுவதையும் உறிஞ்சி எடுக்கும் வரை, அதை அப்படியே ஊறவிட வேண்டும்.
பின்னர் இந்த ரவைக் கலவையை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அரைத்த ரவை மாவை மீண்டும் அதே பாத்திரத்துக்கு மாற்றி, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது தாளிப்பை தயார் செய்ய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் மூன்று ஸ்பூன் எண்ணெயை சேர்த்து, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 ஸ்பூன் கடுகு மற்றும் 1 ஸ்பூன் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் 1 ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து, வெங்காயம் பொன்றிறமாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
இந்த தாளிப்பை, முன்னரே தயார் செய்து வைத்திருந்த ரவை மாவுடன் சேர்த்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி அரிசி மாவையும் சேர்த்து, நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, மாவு முழுவதும் பரவும் வகையில் நன்றாகக் கலந்துவிட வேண்டும்.
பின்னர் ஒரு குழிவான சிறிய பாத்திரத்தை அடுப்பில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, எண்ணெய் சூடானதும் ஒரு குழிகரண்டியால் தோசை மாவை ஊற்றி, 1 முதல் 2 நிமிடங்கள் வரை வேகவிடவிட வேண்டும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்ததும், திருப்பி போட வசதியான ஒரு கரண்டியை பயன்படுத்தி, புரட்டிப் போட்டு, மேலும் ஒரு நிமிடம் பொன்னிறமாக வேக விட்டு எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் பஞ்சு போன்ற பன் தோசை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |