Sandhya Raagam: படம்போட்டு மாயாவை அசிங்கப்படுத்திய பெண்கள்.... உண்மையை உடைக்க வந்த தனம்
சந்தியா ராகம் சீரியலில் ரகுராம் மாயாவை தனது மகளாக தத்தெடுத்த நிலையில், தற்போது அந்த உறவை துண்டிக்கும் சூழலில், தனம் அனைத்து உண்மையையும் கூறுவதற்கு வந்துள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் மாயா தான் அவரைக் காப்பாற்றுகின்றார். இது ரகுராமிற்கு தெரியாமல் மாயா கெட்டப்பெயர் எடுத்து வருகின்றார்.
தற்போது தனம் மாயா இருவரும் கோவிலில் பேசிய காட்சியை வீட்டு பெண்கள் ரகுராமிடம் போட்டு காட்டி விரிசலை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் மாயா இனி தனது மகள் இல்லை என்று ரகுராம் முடிவெடுக்கும் நிலையில், தனம் தற்போது வந்து அனைத்து உண்மைகளை உடைப்பதாக ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |