Sandhya Raagam: பயிற்சியாளராக வந்து நிற்கும் கார்த்தி... பேரதிர்ச்சியில் தனா, கதிர்
சந்தியாராகம் சீரியலில் ரகுராமை பழிவாங்க தனாவிற்கு பயிற்சி கொடுக்க கார்த்தியை புவனேஷ்வரி ஏற்பாடு செய்துள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. அக்கா தங்கைகளாக வாழ்ந்த இருவர் திருமணத்தால் பிரிகின்றனர்.
தற்போது அவர்களின் பிள்ளைகள் அக்கா தங்கையாக வாழ்ந்து காட்டும் கதையைக் கொண்டு செல்கின்றது. தனாவை பழிவாங்க துடிக்கும் கார்த்தி ஒருபக்கம், ஜானகி ரகுராமைப் பழிவாங்க புவனேஷ்வரி ஒரு பக்கம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் கதிரை கார்த்தியின் ஆட்கள் கத்தியால் குத்தியுள்ளனர். பின்பு மருத்துவமனையிலிருந்து மீண்ட கதிர் தற்போது தனாவிற்கு பக்கபலமாக இருக்கின்றார்.
தனா தற்போது பேட்மிட்டனில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இவருக்கு பயிற்சி கொடுப்பதற்காக கார்த்தி வந்துள்ளார்.
ரகுராமை பழிவாங்குவதற்கு புவனேஷ்வரி ஸ்பான்ஷரிடம் பேசி இவ்வாறு செய்துள்ளார். கார்த்தியை அவதானித்த தனா மற்றும் கதிர் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |