இருவரையும் ஒரே அறைக்குள் விட்டால்.... கணவர் நாக சைதன்யாக குறித்து சமந்தா ஓபன் டாக்
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவரான நடிகர் நாக சைதன்யாவைக் குறித்து கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை சமந்தா
காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா தன் முன்னாள் கணவரான நாக சைதன்யா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் பல மொழிகளை சேர்ந்த திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் காபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா முன்னாள் கணவரான நாக சைதன்யா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கணவரின் பிரிவு
கணவர் நாக சைதன்யாவின் பிரிவிற்கு பின்பு, வாழ்க்கை கடினமாக இருந்தது, ஆனால் தற்போது பரவாயில்லை. முன்பைவிட நான் தைரியமானவளாக இருப்பதாகவும், ஜீவனாம்சமாக 250 கோடி வாங்கியதாக செய்தி வெளியானது. தினமும் காலையில் எழுந்தவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை" என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.
மேலும் கரண் ஜோஹர் கணவர் என்று கூறி கேள்வி கேட்கையில், சமந்தா சற்று முகம் சுழித்துக் கொண்டு முன்னாள் கணவர் என்று பதில் அளித்ததோடு, பிரிவிற்கு பின்பு கடினமான உணர்வு குறித்து கேள்வி எழுப்பிள்ளார்.
ex ni ex ane antaru. cheppe paddathi antu okkati yedchindhi ???? https://t.co/SckA73UWET
— NR (@Nayab_tweetz) July 21, 2022
ex ni ex ane antaru. cheppe paddathi antu okkati yedchindhi ???? https://t.co/SckA73UWET
— NR (@Nayab_tweetz) July 21, 2022அதற்கு சமந்தா, "எங்கள் இருவரையும் ஒரு அறையில் விட்டால், கூர்மையான பொருட்களை மறைக்க வேண்டும் என்பது போன்ற கடினமான உணர்வுகள் உள்ளன" என்றார். தற்போது இவருக்கும் இடையே நல்ல சுமுகமான சூழ்நிலை இல்லை எனவும் ஆனால் எதிர்காலத்தில் மாறலாம் என்றார்.