தக்காளி செடி காய்காமல் இலைகள் மஞ்சளா இருக்கா? அப்போ உப்புநீரில் இதை கலந்து ஊற்றுங்க
தக்காளி செடிகள் காய்க்காமல் இலைகள் மஞ்சளாக காணப்பட்டால் இந்த செடிக்கு மெக்னீசியம் குறைபாடு உள்ளது. இந்த பதிவில் அதற்கான தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
தக்காளி செடி
தக்காளி உணவு சமைப்பதற்காக பயன்படுத்தும் ஒரு காய்கறி வகையாகும். நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் தக்காளியை விட வீட்டில் நட்டு அதில் இருந்து பறிக்கப்பட்ட தக்காளியை பயன்படுத்துவது சுவை அதிகம்.
இந்த தக்காளி செடிகளுக்கு அதிகளவான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். எனவே இந்த செடிகளுக்கு கடைகளில் கிடைக்கும் ரசாயன உரங்களுக்குப் பதிலாக, வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கை உரம் மிகவும் நன்மை தரும்.
பொதுவாக தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருப்பது மெக்னீசியம். அதிலும் குறிப்பாக குளோரோபில் தான் செடிகளுக்கு பச்சை நிறத்தை கொடுத்து சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றும் ஒளிச்சேர்க்கை செயல்முறைக்கு உதவுகிறது.
இன்னும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி எடுக்க மெக்னீசியம் அவசியம். உங்கள் தக்காளி செடிகளில் மெக்னீசியம் குறைபாடு இருந்தால் அதை எளிதாகக் கண்டறியலாம்.
மெக்னீசியம் குறைபாடு உள்ள செடிகளில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். ஆனால் இலைகளில் இருக்கும் நரம்புகள் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் தக்காளி செடியின் இலையை நீக்கவே வெட்டவோ கூடாது. இந்த மெக்னீசிய குறைபாட்டை நீக்க எப்சம் சால்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் சல்பர் கொண்ட ஒரு இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும்.
செடிகளுக்கு மெக்னீசியம் குறைபாடு இருக்கும்போது மட்டுமே இதை பயன்படுத்துவது நல்லது. இதை அதிகளவு பயன்டுத்த கூடாது.
இதற்கு ஒரு கேலன் (சுமார் 3.78 லிட்டர்) தண்ணீருக்கு ஒரு டேபிள்ஸ்பூன் என்ற விகிதத்தில் எப்சம் சால்ட்ஸை நீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். இந்த கரைசலை செடி நடுவும் போது ஒவ்வொரு செடிக்கும் அடிப்புறத்தில் ஊற்ற வேண்டும்.
இதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் தக்காளி செடியில் காய்கள் அதிகமாக காய்க்கும். காரணம் தக்காளிச் செடிகளுக்கு எப்சம் சால்ட்ஸ் கூடுதல் மெக்னீசியம் சத்து அளிப்பதால் இதில் அதிகளவாக காய்கள் உருவாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |