கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா - அயர்லாந்து அணியுடன் மோதும் முதல் டி20 தொடக்கம்!
இந்திய அணி இங்கிலாந்து இடையேயான நின்று போன 5 வது டெஸ்ட் போட்டியை ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
ரோகித்துக்கு கொரோனா
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், கூறியதாவது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போது அவர் அணி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.சி.ஐ. மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார் என பதிவிடப்பட்டுள்ளது.
முதல் டி20
தொடர்ந்து, இன்று இந்திய கிரிக்கெட் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார். அதேபோன்று இந்தத் தொடருக்கு விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.
காயத்தில் இருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ் 3 அல்லது 4-வது இடத்தில் களமிறங்கக்கூடும். மேலும்,சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யக்கூடும்.
அதேப்போல், நெருக்கடியுடன் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.