ஓபனாக பேசிய ரக்ஷிதா! இறுதியில் லவ் யூ சென்ன ராபர்ட் மாஸ்டர்: பிக்பாஸில் நடப்பது என்ன?
பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா இருவருக்கும் இடையே சில சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் ஓபனாக பேசியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் ஷெரினா வெளியேற்றப்பட்டார்.
இதில் ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு க்ரஷ் ஏற்பட்டுள்ள நிலையில், எந்நேரமும் சமையலறையிலேயே உலா வந்து கொண்டிருக்கின்றார். இதனை தனலட்சுமி நேற்று கிடைத்த வாய்ப்பில் போட்டு உடைத்தார்.
ரச்சிதா சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
ராபர்ட் மாஸ்டரும் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்ததுடன், வெளியே அவருக்கு வேறொரு பெண் இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் உள்ளே ரச்சிதாவை பார்த்து ஜொல்லு வடித்து வருகின்றார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் சமையலறைக்கு வரவே, அவரிடம் ரச்சிதா தனலட்சுமி கூறியதை கேட்டீர்கள் தானே என்று கூறினார். இதற்கு ராபர்ட் மாஸ்டர் கோபித்துக் கொண்டு சென்றதுடன், தன்னை டீம் மாற்றிவிடவும் கேட்டுள்ளார்.
ரச்சிதா கொடுத்த அட்வைஷ்
ராபர்ட் மாஸ்டரிடம் ரச்சிதா ஏன் அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்? குழந்தை தனமாக இருக்காதீர்கள்... எதிரி மாதிரி இருக்காதீர்கள்.. அவ்வாறு இருந்தால் எதிரே இருப்பவர்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள் என்றார்.
அதற்கு ராபர்ட் எனக்கு உங்களை பிடிக்கும் அதனால எப்படி நார்மலாக இருப்பது? என்ற கேட்க... அதற்கு ரச்சிதா எனக்கும் நிறைய பேரை பிடிக்கும் நான் நார்மலாக இல்லையா என்று கூறினார்.
தன்னையே அதிகமாக எதற்காக கலாய்த்து வருகின்றீர்கள் என்றதற்கு ராபர்ட் நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூற... மூக்குத்தி என்று அழைத்து தன்னை கலாய்த்ததை ரச்சிதா கேட்க, நீங்கள் இந்த வீட்டில் ஒரு மாதிரி ஆகிவிடடால் மற்றவர்கள் என்னை மட்டுமே திரும்பி பார்ப்பதாகவும், தான் தான் இதற்கு காரணம் என்று நினைத்துவிடுவதாகவும், தயவு செய்து நார்மலா இருங்க என்று மீண்டும் அழுத்தி கூறினார்.
இதையெல்லாம் கேட்ட ராபர்ட் இறுதியில் நன்றி கூறியதோடு, லவ் யூ என்று கூற ரச்சிதா முகம் மாறியுள்ளது. ஆனால் ராபர்ட் இது எப்போதும் சொல்றது தான், டார்லிங் என்று கூறிவோம் அது மாதிரி... இது பாசம் வேஷம் இல்லை என்று கூறி ரச்சிதாவை வாயடைக்க வைத்துவிட்டு சென்றுள்ளார்.