உணவு ஆர்டர் செய்து பாதிக்கப்பட்ட தமிழருக்கு தமிழில் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்ட Zomato!
ஜொமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்த தமிழர் ஒருவருக்கு இந்தி தெரியாது என்பதால் அவர் ஏமாற்றப்பட்ட விடயம் இணையத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து zomato நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் சம்பந்தபட்ட ஊழியரை zomato நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
விகாஸ் என்பவர் ஜொமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்தவற்றில் ஒரு உணவு மிஸ் ஆனதால் அது குறித்து கஸ்டமர் கேரிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர்களோ விகாஸுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
கஸ்டமர் கேர் சாட்டை கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு விகாஸ் கூறியதாவது,
ஜொமாட்டோவில் நான் ஆர்டர் செய்த உணவில் ஒரு உணவு மிஸ்ஸானது.
எனக்கு இந்தி தெரியாது என்பதால் பணத்தை திருப்பித் தர முடியாது என கஸ்டமர்கேரில் கூறிவிட்டார்கள்.
ஒரு இந்தியனான எனக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று பாடம் எடுத்தார்கள். அவருக்கு தமிழ் தெரியாததால் நான் பொய் சொல்வதாக கூறினார்.
Ordered food in zomato and an item was missed. Customer care says amount can't be refunded as I didn't know Hindi. Also takes lesson that being an Indian I should know Hindi. Tagged me a liar as he didn't know Tamil. @zomato not the way you talk to a customer. @zomatocare pic.twitter.com/gJ04DNKM7w
— Vikash (@Vikash67456607) October 18, 2021
ஒரு வாடிக்கையாளரிடம் இப்படி பேசக் கூடாது ஜொமாட்டோ என்றார். இந்நிலையில் #Reject_Zomato என்கிற ஹேஷ்டேகுடன் பலரும் தமிழருக்கு ஆதரவாக ட்வீட் செய்து வரும் நிலையில் இந்த சர்ச்சைக்கு zomato நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
zomato நிறுவனம் நிறுவனம் தமிழில் எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.