தங்கத்தினை ஏன் பிங்க் நிற பேப்பரில் கொடுக்கின்றனர் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய உண்மை
தங்கம் வாங்கிய பின்பு அதனை பிங்க் நிற பேப்பரில் சுற்றிக் கொடுப்பதற்கான காரணத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தங்கம் Vs பிங்க் பேப்பர்
பெரும்பாலான தங்க நகை கடைகளில் தங்க நகை எடுத்த பின்பு அதனை பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுப்பதை நாம் அவதானித்திருப்போம்.
இதற்கு ஒரே ஒரு அறிவியல் விளக்கம் மட்டும் கிடையாதாம். காலப்போக்கில் உருவான பாரம்பரியம், மனித மனதை பாதிக்கும் நிற உளவியல், வணிக ரீதியான வசதி ஆகிய 3 காரணங்கள் உள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் வெறும் உலோகமாக பார்க்காமல், செல்வத்தின் அடையாளம், சுபநிகழ்வுகளின் சின்னம், பாதுகாப்பான முதலீடு போன்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
திருமணம், பூஜை, சடங்கு இவற்றிற்கு தங்கம் தவிர்க்க முடியாத முக்கிய ஒன்றாக உள்ளது. இவ்வாறு மதிப்பு மிக்க பொருளை வாடிக்கையாளர்கள் பெறும் போது, சாதாரணமாக இருக்காமல் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நகை வியாபாரிகள் இவ்வாறு செயல்படுத்தியுள்ளனர்.

பிங்க் நிறம்
பிங்க் பேப்பரில் அர்த்தம் நிற உளவில் அடிப்படையாக பார்க்கையில், அமை மனதிற்கு அமைதி, இனிமையை தரக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் இந்த நிறத்தினை பார்த்ததும், மென்மையான, நேர்த்தியான உணர்வு உருவாகின்றது. பளபளப்பாக இருக்கும் தங்கம் இன்னும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றது.

மேலும் தான் ஒரு மதிப்புமிக்க பொருளை வாங்கியுள்ளேன் என்ற மனநிறைவு கூடுதலாக இருக்கும்.
வணிக ரீதியாகவும் இந்த நிற பேப்பர் அழுக்கு, மடிப்பு போன்றவை தெரியாமலும், செலவு குறைவாகவும் இருக்கும் என்று பல நன்மையை கொடுக்கின்றது.
பொதுவாக தங்கம் என்றால் பிங்க் பேப்பர் என்ற எண்ணம் மக்கள் மனதில் உறுதியாகவே பதிந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |