விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்! நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு
தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்காத வரை ரவி பேமாகன் இனி நடிக்கப்போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார்.

ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தன் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் காரணமாக தற்போது அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதற்காக அவர் விவாகரத்தும் கோடி கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மனு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறி உள்ளார். பல நிகழ்ச்சிகளிலும் பல விழாக்களிலும் பொது இடங்களிலும் அவர் கெனிஷாவுடன் மிக நெருக்கமாக காணப்படுகிறார்.
இதனால் ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று சமூக வலைத்தள பக்கத்தில் பல தகவல் பரவத்தொடங்கின.
இதற்கு பல நாட்களாக பதில் பேசாமல் இருந்த கெனிஷா நேற்று இதற்கு பதிலளித்து தன்னுடைய வாழ்க்கை துயரத்தையும் கூறி தான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைக்க மாட்டேன் என்றும் அவர் கூறி காணொளி வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது ரவி மோகன் தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரையில் நடிக்க மாட்டேன் என பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

தற்போதைய அறிவிப்பு
அவர் கூறியதன் படி, 'நான் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட பேட்டி. இது சினிமாவை சார்ந்தது கிடையாது. இத்தன நாள் நான் பேசமால் இருந்ததற்காக நான் முட்டாளாக உணர்கிறேன்.
ரவி மோகன் என்றால் சாதுவானவர் என்று சொல்கிறார்கள். ஆனால் சாது மிரண்டால் காடு பொல்லாது. நான் முதலில் சொல்ல விரும்புவது எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை என்னுடைய படம் இனிமேல் திரையரங்கில் வெளியாகாது.
ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை. இத்தனை நாள் என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |