இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? உண்மை இது தான்!
நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் இன்று திருமணம் என்ற தகவல் நேற்றைய தினம் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியிருந்தது.
திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக காணொளியுடன் வெளியாக இந்த தகவல் பற்றிய உண்மையான விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை ராஷ்மிகா
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

கடந்த வருடம் நிச்சயதார்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பெப்ரவரி 2 ஆம் திகதியான இன்று திருமணம் ஆகப்போவதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் பிரகாரம், இன்று அவர்களுக்கு திருமணம் இல்லை என்றும்; பிப்ரவரி 26ஆம் திகதி தான் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், நேற்று வேறு ஒரு திருமணத்துக்கு நடந்த ஏற்பாட்டினை பார்த்து அது ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்துக்கு நடந்த ஏற்பாடு என வீடியோ எடுத்த நபர் தவறாக புரிந்துகொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துக்கொள்ளப் போகின்றார்கள் என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |