வீட்டில் பழைய சாதம் இருக்கா? வீசாதீங்க அதை வைத்து மொறு மொறு பூரி செய்யலாமே
வீட்டில் பழைய சாதம் மிஞ்சினால் நாம் எல்லோரும் அதை வீணாக குப்பையில் வீசுகின்றோம். ஆனால் இதை வைத்து காலை உணவு செய்யலாம் என்பது அவ்வளவாக யாருக்கும் தெரியாது.
இன்றைய பதிவில் பழைய சாதத்தை வைத்து நாம் சுவையான மொறு மொறு பூரி எப்படி செய்யலாம் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இனிமேல் பழைய சாதத்தை வைத்து இந்த பூரியை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- 1 கப் பழைய சாதம்
- 1 கப் கோதுமை மாவு
- 1 ஸ்பூன் சர்க்கரை
- அரை ஸ்பூன் உப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்யும் முறை
பழைய சாதத்தை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து கோதுமை மாவை சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்துகொள்ளவும்.
இதில், எண்ணெய் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பிசையவும். 1 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். தொடர்ந்து வழக்கம் போல் பூரி செய்து எண்ணெய்யில் சுட்டு எடுக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை... வெறும் 15 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?](https://cdn.ibcstack.com/article/effe4abb-fb93-44f5-9260-5c4b365adc7f/24-66856dffafb95-md.webp)