அந்தரங்க மருத்துவராக மாறிய பப்ஜி மதன் - மாகாபா ஆனந்த் ஆதரவு? கசிந்த ஓடியோ
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு தளமான பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிவந்த 'பப்ஜி மதன்' என்கிற யூடியூபர் தலைமறைவான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யூடியூப் மூலம் பப்ஜி விளையாட்டை ஸ்டீரீம் செய்து, அதில் லைவ் சேட்டும் செய்யும் செயல் அண்மை காலமாக தலைதூக்கியுள்ளது. VPN மூலம் சட்டவிரோதமாக பப்ஜி லிங்கை வைத்து ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் இணைந்து விளையாடும் போது, கெட்ட வார்த்தைகளால் பேசி சேட் செய்வதால், இளம்பருவ பெண்களும் அவர்களின் பேச்சுக்களுக்கு ஈர்க்கப்படுகின்றனர்.
இதனால், அவர்களின் பப்ஜி விளையாட்டை எப்போதெல்லாம் ஸ்டீரிம் செய்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த லைவ் சேட்டிங்கில் உள்நுழைந்து, பேச்சுக்களை ரசித்து வருகின்றனர்.
அந்த வகையில், பெண்களை பற்றியும், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் லைவ் ஸ்டீரிம் செய்து வந்த மதன் ஓபி என்பவர் மீது தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மேலும், பப்ஜியை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச் செய்து நிர்வாண புகைப்படங்களையும், வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, முதலிரவில் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும், எவ்வாறு தங்கள் உடலை முறுக்கேற்ற வேண்டும் என்றும் ஆன்லைன் அந்தரங்க மருத்துவராகவே பேசி வந்துள்ளார். இவனின் திமிரான பேச்சுக்கு இன்றைய காலக்கட்ட குழந்தைகள் அதுவும் 2k கிட்ஸ் குழந்தைகள் மிகவும் அடிமையாகவே மாறிவிட்டனர்.
தற்போது தலைமறைவாக உள்ள மதனிடம் சில மாதங்களுக்கு முன்பு மாகாபா ஆனந்த் கூட இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் பேசியிருந்தார்.
அதில், மதன் செய்யும் செயலுக்கு ஆதரவு தருவதுபோலவும், எல்லோரும் தப்பு செய்கிறார்கள், எவனும் உத்தமன் கிடையாது, எல்லாருக்கும் கெட்ட வார்த்தை தெரியும், கெட்ட பழக்கம் இருக்கும், இதை ஓபனா யாரும் பண்றதில்ல, நீங்க ஓபனா பண்றதுல எனக்கு மகிழ்ச்சி எனவும் கூறிய விடயம் தான் தற்போது வைரலாகி பரவி வருகிறது.