நான் என்ன Prime Minister-ஆ..? பப்ஜி மதனை டார்ச்சர் செய்த காணொளி!
யூடியூப்பில் ஆபாசமாக பேசி தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தர்மபுரியில் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
அவரது மனைவி கிருத்திகா நேற்று கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பப்ஜி மதன் இன்று கைது செய்யப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்டிருக்கும் மதனை இன்று மாலைக்குள் சென்னை அழைத்து வர காவல்துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
இதற்கிடையே மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில், பப்ஜி மதனை மதனை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்கள் அவரை படம் பிடித்தனர்.
அப்போது ஒளிப்பதிவாளர்களைப் பார்த்து 'நான் என்ன பிஎம் -ஆ ஏன் என்னை வீடியோ எடுக்குறீங்க? என பப்ஜி மதன் கோபமாகக் கேட்டுள்ளார்.
அதற்கு அருகிலிருந்த காவல் ஆய்வாளர் ''நீ அக்யூஸ்ட் வாயா'' என்று காட்டமாகக் கூறி கூட்டிச் சென்றுள்ளனர்.