இறாலில் இதை செய்து பார்த்துள்ளீர்களா?
கடலுணவுகளில் அதிகமானோருக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். அதன் வித்தியாசமான சுவை அனைவரையும் கட்டிப்போட்டு விடும்.
இறாலில் வித்தியாசமான உணவுகள் நிறைய செய்து சாப்பிடலாம். இப்போது இறால் புட்டு எவ்வாறு செய்யலாம் எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்
வெ.பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
சோம்பு,சீரகம் - தலா 20 கிராம்
எலுமிச்சை பழம் - 1
நல்லெண்ணெய் - 10 மி.லி
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்யவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெ.பூண்டு என்பவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்திருந்த இறாலை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி, வெ.பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதன் பின்னர் அரைத்த இறாலை போட்டு கிளறி, பின்பு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இறால் வெந்து உதிரியாக வரும்போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும். அருமையான இறால் புட்டு ரெடி.