பொன்னி சீரியல் நடிகருக்கு என்னாச்சு..படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம்
பொன்னி சீரியல் நடிகர் சபரி படுத்த படுக்கையோடு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொன்னி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்த சீரியல் தான் பொன்னி.
இந்த சீரியலில், சபரி கதாநாயகனாகவும், வைஷ்ணவி கதாநாயகியாகவும் நடித்து வந்தனர்.
குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரியல், மாமியார் - மருமகளுடன் ஒன்று சேர்ந்தது போன்று முடிவுக்கு வந்தது.
விபத்தில் சிக்கினாரா சபரி?
இந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சபரிக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவரால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
“கூடிய விரைவில் எழுந்து வருவேன்..” என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். இதற்கு ரக்ஷிதாவின் முன்னால் கணவர் தினேஷ், “தம்பி சீக்கரம் எந்திச்சு வா.. டீ சாப்புட போவோம்.. என் சார் இங்க வலயபாளையம் சின்னச்சாமி இருகாரா..?” என குறிப்பிட்டு பதில் கொடுத்துள்ளார்.
இந்த பதிவு சின்னத்திரை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சபரியின் உடல்நலம் சரியாக பிராத்திப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |