கோடிக்கணக்கில் மகளின் திருமணத்தை நடத்தி வியக்க வைத்த முன்னாள் எம்.பி - ஆடிப்போன ஊர் மக்கள்
தெலுங்கானாவை சேர்ந்த டி ஆர் எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தனது மகளின் திருமணத்தை செய்த பிரம்மாண்டம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி அவரின் மகளான ஸ்வப்னா ரெட்டியின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக ரூ.250 கோடி செலவில் நடத்தியுள்ளார்.
கடந்த 12ம் தேதி அன்று இந்தோனேசியாவின் பாலிதீவில் நடந்த இந்த திருமணத்தில் பங்கேற்ற 500 பேரை சிறப்பு விமானம் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே 3 லட்சம் பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், வரவேற்பு நிகழ்ச்சிக்காக மட்டுமே கம்மம் மாவட்டத்தில் எஸ். ஆர் கார்டன் என்று புதிதாக உருவாக்கப்பட்டது.

பிரம்மாண்ட திருமணம்
இதுமட்டுமின்றி, 30 ஏக்கரில் பந்தல் போடப்பட்டதுள்ளது. கார்களை நிறுத்துவதற்காக 100 ஏக்கரில் 60ஆயிரம் கார்களை பார்க் கிங் செய்யும் வசதி செய்யப்பட்டது.
திருமண அழைப்பிதழுடன் வரும் கிராம மக்கள் அனைவருக்கும் சுவர் கடிகாரம் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்காக மட்டுமே 25 ஏக்கரில் உணவு பரிமாறும் டேபிள், சேர் போடப்பட்டிருந்தது.

250 கோடி செலவு
ஏறத்தாழ 3 லட்சம் பேருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதெல்லாம் விட தனது மகளின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிதாக சாலை அமைத்தும், புதிய மேம்பாலங்களையும் ஸ்ரீனிவாச ரெட்டி கட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த திருமணத்தில், ஸ்ரீனிவாச ரெட்டியின் நெருங்கிய நண்பரான ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியும் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.