இந்த பிரச்சினை இருப்பவர்கள் பப்பாளியை தொடக் கூட வேண்டாம்...எச்சரிக்கை?
பலருக்கு பிடித்த சுவையான பழங்களில் பப்பாளியும் ஒன்று.
பப்பாளி வைட்டமின் சி, பொட்டாசியம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது.
பப்பாளி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
எனினும், பப்பாளி பழத்தினை அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து.
இப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
- ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை இருந்தால் பப்பாளி பழத்தை சாப்பிடாதீர்கள்.
- பப்பாளியில் உள்ள பாப்பைன் அழற்சியை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.
- அதிகமாக பப்பாளி சாப்பிட்டால் வீக்கம், தலைச்சுற்றல், முகப்பரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
- பப்பாளி சூடான பண்புகளைக் கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.
- பப்பாளி கருப்பையில் உள்ள கருவிற்கு தீங்கு விளைவித்து கருச்சிதைவை கூட ஏற்படுத்தும்.
- பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலையை அதிகரிக்கும்.
- அறுவை சிகிச்சை செய்தவர்கள் சில வாரங்களுக்கு பப்பாளியை பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள், பப்பாளியை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது.
முக்கிய குறிப்பு
எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பப்பாளி பல ஆரோக்கிய நலன்களை நமக்கு அள்ளி வழங்குகிறது.
எனினும், இதனை அதிகமாக எடுத்து கொள்வதும் ஆபத்து.
அதேபோல ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்களும் பப்பாளியை அதிகம் எடுத்து கொள்ளக் கூடாது.