நீரிழவு நோயாளிகள் வேர்க்கடலை பட்டரை தினமும் சாப்பிடலாமா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?
சக்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலை வெண்ணெயை உண்ணும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக நாா்ச்சத்துள்ள பொருள்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், சா்க்கரை நோயுற்றவா்கள் நாா்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உண்ண வேண்டும்.
சொட்டை விழுந்த இடத்தில் இதை ஒரு துளி விடுங்க... அடர்த்தியா முடி கிடுகிடுனு வளரும்!
நாா்ச்சத்துள்ள பொருள்களை அதிகம் உண்டால், அது நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படவிடாமல் தடுக்கும்.
அதனால் இடைப்பட்ட நேரங்களில் திண்பண்டங்களை கொறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.
வேர்க்கடலை வெண்ணெயை விரும்பி உண்பவா்கள், அவா்களுடைய தினசாி காலை உணவில் அதை சோ்த்துக் கொள்ளலாம்.
ஏனெனில் ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற உணவுகள், சா்க்கரை மற்றும் உப்பு ஆகியவை தேவைப்படாத சா்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.
சா்க்கரை நோயாளிகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய்
சா்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை பராமாிக்க வேர்க்கடலை வெண்ணெய் உதவி செய்கிறது.
வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகிய இரண்டும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை குறைவாகவே கொண்டுள்ளன.
அதனால் அவற்றை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது.
உடல் எடையைப் பராமாிக்க வேர்க்கடலை உதவி செய்கிறது.
முக்கிய குறிப்பு
பொதுவாக நீரிழிவு நோயுற்றவா்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே நீரிழிவு நோயுற்றவா்கள், தங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதயத்தையும் அதன் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்துவிட்டு, ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற இயற்கை முறையில் தயாாிக்கப்பட்ட உணவுகளை அதிகம் உண்டால் அவா்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.