பணம் கொடுத்து ஜெயிலுக்கு போகும் வினோதம்.. காரணம் என்ன?
தெலுங்கானாவில் மக்கள் பணம் கொடுத்து சிறைக்கு செல்லும் சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொதுவாக தவறு செய்பவர்களுக்கு தங்களது திருத்திக் கொண்டு வாழ்வதற்கு சிறைச்சாலையில் தண்டனை கொடுப்பது வழக்கமாகும்.

தற்போது கொலை, கொள்ளை, வழிபறி போன்ற குற்றங்களுக்கு காவல்நிலையத்தில் காவலர்கள் பயங்கரமாக தண்டனை வழங்கி வருகின்றனர்.
குறிப்பிட்ட காலம் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு பின்பு வெளியே வந்து திருந்தி வாழ்வதற்கு ஒரு வழியை கொடுப்பார்கள்.
பணம் கொடுத்து சிறைக்கு செல்லணுமா?
ஜெயில் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. உள்ளே குற்றவாளியாக இருக்கும் ஒவ்வொருவரது மனநிலை ஒவ்வொரு விதமாகவே இருக்கும்.
அங்கு எந்த மாதிரியான அனுபவம் கிடைக்கும் என பலரது கேள்வியாக இருக்கும். ஓரளவிற்கு சினிமாவில் இதுபோன்ற சிறைச்சாலையினையும், அங்கு கைதிகள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதையும் பார்த்திருப்போம்.

குற்றம் செய்தால் தான் சிறைக்கு செல்ல முடியும் என்று இல்லாமல், குற்றவாளிகள் அல்லாத நபர்களும் தற்போது சிறைக்கு செல்கின்றனர்.
அதாவது சிறைவாசத்தினை அனுபவிப்பவர்களின் மனநிலை, சூழ்நிலை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக பணம் செலுத்தி சிறைக்கு செல்லும் வினோத பழக்கம் தற்போது தோன்றியுள்ளது.
ஆம் தெலுங்கானாவில் தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |