நடிகர் பார்த்திபன் விவாகரத்திற்கும் இது தான் காரணமா? நடிகை சீதா பேட்டி
பார்த்திபன் மற்றும் அவரது மனைவி விவாகரத்து பேசிய விடயம் தற்போது இணையைத்தில் வைரலாகி வருகின்றது.

பார்த்திபன்
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையே ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, நடிகை திரிஷா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு பார்த்திபனும் விளக்கமளித்து மன்னிப்பு கேட்டார்.
இதனால் அந்த விவகாரம் சில நாட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய பேச்சாக இருந்தது.
இப்படி பார்த்திபன் மற்றும் த்ரிஷா பற்றி ஒரு பக்கம் பேசப்பட்டு இருக்கும் சமயத்தில் பார்த்திபனுக்கும் நடிகை சீதாவிற்கும் விவாகரத்து நடைபெற்றதை பற்றி அவர்கள் பேசிய காணொளி வைரலாகி வருகின்றது.

சீதா மற்றும் பார்த்தீபன் விவாகரத்து
பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் இருவரிடமும் விவாகரத்து பற்றிய பேட்டி எடுக்கப்பட்டது.
அதில் சீதா “ஒரு ஒரு சராசரி பெண் தனக்கு மட்டும் தான் தன்னுடைய கணவர் என்று அவரிடம் இருந்து அன்பை எதிர்பார்ப்பார் அந்த அன்பு கிடைக்காத போது அந்த வாழ்க்கை எதற்கு? பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கான சுயமரியாதையும், காதலும் எதுவும் கணவர்களிடம் கிடைக்காது.

ஆண்களுக்கு எப்போதும் ஒரு பெண் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தால் அந்த உறவு சரி வராது. ஒரு வாழ்க்கையில் நமக்கு அன்பு தேவை என்று நினைத்து அதை நாம் கேட்டு வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதை விட விலகி இருப்பது நன்மை என்று சொல்லாமல் சொன்னார் ”.
பார்த்திபன் விவாகரத்து பற்றி கூறயில் “12 வருடம் வாழ்ந்த வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அந்த வாழ்க்கை மூலம் எனக்கு கிடைத்த குழந்தைகள் பெரும் வரம்.
அவர் கொடுத்த மனைவி என்ற அந்தஸ்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது. நான் என் சினிமாவை நோக்கி போவேனே தவிர இன்னொரு வாழ்க்கையை தேடி போக மாட்டேன் என சோகமாக கூறி இருக்கிறார்”.

இதற்கு ரசிகர்கள் பலரும் “என்ன தான் இருந்தாலும் சினிமா வாழ்கை ஒரு பக்கம் இருக்க தனிபட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தா விட்டால் விவாகரத்தில் தான் முடியும். அது சினிமா மட்டுமில்லை எந்த துறையாக இருந்தாலும் சரி” என கருத்து தெரிவித்துள்ளனர்.
பார்த்திபன் மற்றம் சீதா விவாகரத்திற்கு காரணம் அவர்களுக்குள் காதல் இருந்தாலும் கணவன் மனைவிக்கான நேரத்தை கொடுக்காமல் இருந்தால் அது விவாகரத்தில் தான் முடியும் என தெளிவாகிறது. பலருக்கும் விவாகரத்திற்கு காரணம் இதுதான். பார்த்திபனுக்கும் இதுதான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |