பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி: நள்ளிரவில் நடந்த துயரம்! ஜாக்கிரதை மக்களே
மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் நாளுக்கு நாள் மாற்றத்தினை ஏற்படுத்தினை வருவதால் உடலுக்கு கேடு விளைவிப்பதுடன் இறுதியில் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுகின்றது என்பதற்கு இந்த உண்மை சம்பவமே நம் அனைவருக்கு விழிப்புணர்வு.
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளுக்கு உத்திரபிரேத மாநிலத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான கைலாஷ் என்பவர் சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று சிதம்பரம் திரும்பி வந்துள்ளார்.
சிதம்பரம் அடுத்துள்ள பெரியகுமட்டி என்ற கிராமத்தில் வழக்கமான தங்குமிடத்துக்கு வந்த அவர், இரவு உணவிற்காக பரோட்டாவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே அருகில் இருந்தவர்கள், மருததுவமனைக்கு அழைத்துச் சென்ற வேலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் எற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக பரோட்டா சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக வெளியாகும் தகவல் மக்களை பயங்கர பீதியில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.