இலங்கையில் சிக்கிய பராசக்தி குழுவினர்- சமூக வலைதளங்களில் கசிந்த தகவல்
பராசக்தி படக்குழுவைச் சேர்ந்த சிலர் இலங்கையில் சிக்கித் தவிப்பதாக ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை- கொழும்பில் இடம்பெற்றது.
இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சிக்கிய பராசக்தி குழு
இந்த நிலையில், இலங்கை படப்பிடிப்பு முடிந்ததால் இயக்குநர் சுதா கொங்காரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் இந்தியா- சென்னை திரும்பினார்கள்.
மாறாக, படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இலங்கையில் படப்பிடிப்பை நடத்திக்கொடுக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தததாகவும் படப்பிடிப்பு முடிந்ததும் மீதமுள்ள பணத்தை கொடுக்காத காரணத்தினால் அந்த நிறுவனம் பராசக்தியில் பணியாற்றிய சிலரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் இலங்கையிலிருந்து சென்னை திரும்ப முடியாமல் சிலர் இலங்கையில் இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும், விஜய் நடித்து வெளிவந்த “தி கோட்” படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது நடந்த செலவுக்கும் தயாரிப்பு நிறுவனம் முழுமையாக பணத்தை கொடுக்காத காரணத்தினால் பராசக்திக்கு இப்படியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “இவ்வளவு பெரிய நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா?” என கோலிவுட்டில் உள்ள தயாரிப்பு நிர்வாகிகள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |