அரசிக்கு மீண்டும் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அரசிக்கு மீண்டும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்- 2
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, தற்போது இரண்டாம் பாகத்தையும் வெற்றிகரமாக கொண்டு செல்கிறது.
அந்த வகையில், குமரவேல் வலையில் விழுந்த அரசி, பாண்டியனுக்காக வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.
இதனை எப்படியாவது தடுக்க நினைத்த குமரவேல் அரசியை கடத்தி வைத்து நாடகம் போட்டார்.
குமரவேலுக்கு பாடம் காட்ட நினைத்த அரசியை அவரே ஒரு தாலியை கட்டிக் கொண்டு, குமரவேல் மனைவியாக சென்றார். ஆனால் நாளுக்கு நாள் அரசியை பகடைகாயாக பயன்படுத்தி குமரவேல் ஆடும் ஆட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியை உண்மையை சண்டையில் கூறி விடுகிறார். அதற்கு மீனாவும் ராஜீவும் ஆதரவாக இருக்கிறார்கள்.
அரசி மறுமணம் செய்துக் கொள்வாரா?
இந்த நிலையில், கடும் கோபத்தில் வெளியில் வந்த பாண்டியன் தன்னுடைய மகளை தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அப்போது சற்றும் யோசிக்காமல் அரசி தாலியை கழட்டி வீசி விட்டு பாண்டியனுடன் அவருடைய வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து அரசி- குமார் இருவருக்கும் விவாகரத்து தரப்பட்டது. அதே சமயம், குமார் செய்த தவறுகள் அனைத்தையும் அரசி மன்னித்து விட்டதாக நீதிமன்றத்தில் கூறி, வழக்கில் இருந்து வெளியில் கொண்டு வந்துள்ளார். அதன் பின்னர், வீட்டிற்கு வந்த அரசியை பெண் கேட்டு மீண்டும் பாண்டியனின் சகோதரி வருகிறார்.
முதல் தடவை நடந்தது போன்று நடக்கக் கூடாது என சுதாரித்த பாண்டியன் அரசியிடம் சென்று, “ திருமணம் செய்து கொள்ள விருப்பமா?” எனக் கேட்கிறார். இவ்வளவு கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் கடந்து வந்த அரசி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா?” என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |