வில்லத்தனத்தில் கணவரை ஓட விடும் அரசி.. என்ன செய்கிறார் பாருங்க
தன்னை பலி வாங்க நினைத்த குமரவேலை, அரசி செய்யும் கொடுமைகள் இன்றைய தினம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த சீரியலில், முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டாம் அதே நடிகர்களுடன் சிலருடன் மாமியார்- மருமகள்கள் பந்தம் என்ற தொனிப் பொருளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பாண்டியனின் கடைசி பெண்ணை ஏமாற்றி கோமதி வீட்டிலுள்ள குமரவேல் எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என காதலிப்பது போன்று நடித்து வந்தார்.
குடும்பத்தின் மானம் தன்னால் போய் விடக் கூடாது என முடிவு செய்த அரசி, காரில் கிடந்த தாலியை தனது கையால் கட்டிக் கொண்டு குமரவேல் தான் காட்டினார் என கதையை மாற்றிக் கூறி முத்து வேல், சக்திவேல் வீட்டிற்கு மருமகளாக சென்று விட்டார்.
வலியில் கத்திய குமரவேல்
இந்த நிலையில், சீரியலில் அரசி- குமரவேல் தம்பதிகள் செய்யும் அலப்பறைகள் காட்சிகள் சீரியலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம், அரசி சாப்பாடு பரிமாறும் பொழுது குமரவேல் அரசியை அசிங்கப்படுத்துவதற்கான சாப்பாட்டை கோப்பை இழுத்து சாதத்தை கீழே கொட்டும்படி செய்கிறார்.
அதன்பின்னர் குமரவேல் நினைத்தது போன்று அசிங்கமாக பேசுகிறார். இதனால் கடுப்பான அரசி அறைக்குள் வந்ததும் குமரவேலை அடித்து அறையை விட்டு வெளியில் அனுப்பி விடுகிறார்.
என்ன செய்வது என குமரவேல் நிற்கும் பொழுது அவருடைய அப்பா அவருடைய அறையில் இருந்து வெளியில் வருகிறார். அப்போது அப்பாவிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என யோசிக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |