கதறிய அழுத அரசியா இது? கழுத்திற்கு வந்த கத்தி.. தென்றல் புயலாக மாறிய தருணம்
கடந்த வாரங்களில் கதறி அழுத தன்னை விடுமாறு கெஞ்சிய அரசி தற்போது புயலாக மாறி கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2
பிரபல தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவை தன்வசப்படுத்திக் கொண்டு முன்னிலையில் இருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் முதலாம் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
நேர்மையான அப்பாவுக்கு இருக்கும் மகன்கள் மற்றும் மருமகள்கள் அத்துடன் மகள் திருமணம் இவற்றை கருவாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
அந்த வகையில், பாண்டியன் மானத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று கோமதியின் அண்ணன் குடும்பத்தினர் சதிச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போன்று அரசியை காதலிப்பது போன்று நடித்து அவளை ஏமாற்றி, பாண்டியன் மானத்தை வாங்க நினைத்த அண்ணன் மகனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அரசி மாறியுள்ளார்.
கடுப்பில் கத்தியை நீட்டிய அரசி
இந்த நிலையில், அரசி திருமணம் செய்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் அவளை கடத்தி, திருமணத்தை நிறுத்திய அண்ணன் மகனுக்கு அரசி கழுத்தில் மஞ்சள் கயிறு இருப்பது தெரியாது.
காரில் கிடந்த தாலியை அவரே கழுத்தில் கட்டிக் கொண்டு மானத்தை வாங்க நினைத்தவனுக்கே வாக்கப்பட்டு போவது போன்று கதையை மாற்றி விட்டார். முதலிரவில் அறைக்குள் வந்த அரசி கையில் ஒரு கத்தியுடன் உள்ளே வருகிறார்.
அரசியை தன்னை ஏமாற்றியதை தாங்க முடியாத குமரவேல், இது குறித்து கோபமாக பேசுகிறார்.
கடுப்பான அரசி, குமரவேல் கழுத்தில் கத்தியை வைத்து பேசாமல் போ இல்லன்னா உள்ள இறக்கி விடுவேன்..” எனக் கூறுகிறார். இதற்கு அடுத்து என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |