சுவையான மொறு மொறு ஓமப்பொடி செய்வது எப்படி?
பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய இனிப்புகளில் ஒன்று ஓமப்பொடி.
இந்த ஓமப்பொடியை கடையில் வாங்குவது சிரமமான ஒன்று.
இதனை எளிதான முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – ½ கிலோ கிராம்
- அரிசி மாவு – 50 கிராம்
- ஓமம் – 3 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – ½ ஸ்பூன்
- கல் உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரித்து எடுக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் ஓமத்தை சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஓமம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சலித்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து ஊறிய ஓமத்தை வடிகட்டித் தனியே பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஓமம் ஊறிய தண்ணீரில் கல் உப்பினைப் போட்டு கரைத்துக் கொள்ளவும். ஊறிய ஓமத்தை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
சலித்த கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு ஒரு சேரக் கலக்கவும்.
பின் அதனுடன் கல் உப்பு கரைத்த ஓமத் தண்ணீர், அரைத்த ஓமவிழுது சேர்த்து பிசையவும். தேவையெனில் மேலும் சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பின் மாவினை ஓம அச்சு உள்ள குழலில் அடைக்கவும்.
பின் வாணலியில் பொரிப்பதற்கான எண்ணையை ஊற்றி காய வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அச்சில் உள்ள மாவினை முறுக்காகப் பிழிந்து விடவும்.
வெந்ததும் மறுபக்கம் திருப்பி விடவும். வெந்ததும் முறுக்கினை எடுத்து விடவும். சுவையான ஓமப்பொடி தயார்.
