2022 புத்தாண்டு முதல் நாளில் மறந்தும் கூட இதையெல்லாம் செய்யாதீங்க!
2022 புத்தாண்டின் இன்றைய முதல் நாளில் ஆன்மீக ரீதியாக நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் ஒவ்வொரு நபருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும், தன்னுடைய கனவை நிறைவேற்ற என்ன செய்யலாம் என ஒவ்வொரு நபரும் யோசித்துக் கொண்டிருப்பர்.
முதல் நாளில் ஏற்பட்ட மகிழ்ச்சி வருடம் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கும், அந்நாளில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
* புத்தாண்டு தினத்திற்கு கருப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும், இதேபோன்று பிரச்சனைக்குரிய எந்த விஷயத்தை பற்றியும் பேச வேண்டாம்.
* இன்றைய நாளில் இறைச்சி மற்றும் மதுவை உட்கொள்ள வேண்டாம், மீறி பயன்படுத்தினால் நிதி நெருக்கடி ஏற்படும் என்பது நம்பிக்கை.
* மேலும் யாருக்கும் கடன் எதுவும் கொடுக்க வேண்டாம், அப்படி செய்தால் ஆண்டு முழுவதும் பணப்பற்றாக்குறை ஏற்படும் நிலை வரலாம்.
* உங்களது பணப்பையை காலியாக வைக்க வேண்டாம், இதனாலும் வருடம் முழுதும் நிதி நிலையில் மாற்றங்கள் இருக்கலாம்.
* வீடு முழுவதும் பிரகாசம் சூழும் வண்ணம் ஒளிமயமாக வைக்கவும், விருந்தினர்களை அழைப்பதாக இருந்தால் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை அழைக்க வேண்டாம்.
* இன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமாக மன நிறைவுடன் இருந்தால் வருடம் முழுமையும் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம்.