சமாதியில் இருந்து பார்ப்பேன்... நித்தியானந்தா வெளியிட்ட அடுத்த பரபரப்பு தகவல்!
சுவாமி நித்தியானந்தா பெண் சீடர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் நீண்ட நாட்களாக தேடி வருகின்றனர்.
ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் அடிக்கடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த நாட்களுக்கு முன்பு நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த நித்தி நான் மீண்டு வருவேன் என வீடியோவாக வெளியிட்டு பேசியிருந்தார்.
சாவின் விளிம்பில் இருக்கிறேன்... எலும்பும் தோலுமாக மாறிய நித்தியானந்தா
நித்தி வெளியிட்ட சோகம்
இந்நிலையில், தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “என்னால் முழுமையாக உறங்க முடியவில்லை என்றும், இட்லி கூட சாப்பிட முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தற்போது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி உடல் ஆரோக்கியமாக இருக்க ஆசிரமத்தில் நிர்வாகத்தினை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.
பின்னர், சமாதியின் உள்ளே இருந்து நேரடி கவரேஜ் என குறிப்பிட்ட அவர், சமாதில் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி என்பது சமநிலை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.
குருவின் பார்வையின் அதிர்ஷ்டம்... இனி இந்த ராசியினர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தான்!
வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது. உடல் முற்றிலும் நச்சு தன்மை பெறுகிறது.
அதனால் வெளிப்புற உணவு இல்லை. வழக்கமான தூக்கம் இல்லை. நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும்.
பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும். நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன். நான் சமாதியில் வெறுப்பாளர்கள், எதிர்கள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழப்பார்கள்.
ஒருவருடைய கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஏற்ப நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.