செல்ஃபி மட்டும் அனுப்புங்க... பக்தைகளுக்கு புதிய வேண்டுகோள் விடுத்த நித்தியானந்தா!
போலீசாரால் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா சமீப நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.
மேலும், நித்தியானந்தாவின் சமீபத்திய புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக இருந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக தற்போது புதிய பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், தனது உடல்நிலை சரியில்லாத தகவல் வெளியான நாளிலிருந்து நிறைய பணம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தயவு செய்து பணம் அனுப்பவதை நிறுத்தி விடுங்கள்.
ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்!
பணத்திற்கு பதிலாக அருணகிரி யோகீஸ்வரர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும், விளக்கு ஏற்றும் படத்தை செல்பி எடுத்து பதிவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார் நித்தியானந்தா.
இந்த பதிவை பார்த்த அவரது பக்தர்கள் ஏராளமானோர் நித்தியானந்தா பக்தைகள் விளக்கு ஏற்றி அதன் செல்பியையும் எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.