Neeya Naana: விருந்தினரிடம் கூடவா இப்படி சுத்தம் பார்ப்பது? கோபத்தில் கொந்தளித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் அதிகமாக சுத்தம் பார்க்கும் நபரால் வீட்டில் உள்ள சக நபர்கள் படும் அவஸ்தையை நீயா நானாவில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் வீட்டில் அதீத சுத்தம் பார்ப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் ஒருவர் சுத்தம் பார்ப்பதாக கூறி வாசலில் போட்டுள்ள கால்மிதியை கூட அழுக்காக விடமாட்டாராம். அது மட்டுமல்லாமல் வீடு கூட்டும் விளக்குமாறு கூட அழுக்காகக்கூடாது என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் பார்க்கும் சுத்தத்திற்கு கோபிநாத் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதாவது வீட்டிற்கு விருந்தினர் வந்து சென்ற உடனே அவர்கள் அமர்ந்திருந்த ஷோபாவின் உறையைக் கழற்றி சலவைக்கு போட்டுவிடுவாராம்.
இதற்கு கோபிநாத் தனது பாணியில் சரியான பதிலடியை கொடுத்துள்ளார். கிருமியை அழிப்பதாக நினைத்து ஒரு கிருமியை உங்களது பிள்ளைகளிடம் உருவாக்கி வைத்திருக்கிறீர்... எப்படி அழிக்கப் போகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |