திருமணத்திற்கு முன்.. நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன்! என்ன சொல்லியிருக்கிறார்?
சென்னை மகாபலிபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 9ம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
அன்று காலை 10.20 மணிக்கு இந்து பாரம்பரிய முறைப்படி நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இவர்களது திருமணத்திற்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு வெள்ளி மற்றும் தங்கத்தாலான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தினர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த தம்பதியினர், மறுநாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக, தங்களது காதல் குறித்து விக்னேஷ் சிவன் பேசிய உரையாடல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நயன்தாராவிடம் பிடித்தது
தன்னுடைய காதல் மனைவி நயன்தாரா புடவை அணிந்தால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், நயன்தாராவுடன் எங்கு சென்றாலும் அதுவே தன்னுடைய பேவரைட் இடம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


நயன்தாராவின் சீக்ரெட்
நயன்தாரா பற்றிய சீக்ரெட் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு, இரவு சாப்பாடு முடிந்ததும் அனைத்து பாத்திரங்களையும் அவரே சுத்தம் செய்து வைத்துவிடுவார் என்றும், அவரது தன்னம்பிக்கையை பார்த்து மெய்சிலிர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

