கோடிகளில் புது வீடு கட்டும் நயன்தாரா... இவ்வளவு ரகசியம் உள்ளதா? வாயடைத்துபோன திரையுலகம்!
நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனை நீண்ட வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது கணவருடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் உள்ளார்.
அடிக்கடி இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கும் நேரத்தில் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாட பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டிக்கொண்டு வருகின்றனர்.
கோடிகளில் வீடு
ஏற்கனவே இவர்கள் இருவரும் சென்னை எக்மோரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்குவதற்காக முன்னரே போயஸ் கார்டனில் இரண்டு பிளாட்டை நயன்தாரா வாங்கிப் போட்டு இருக்கிறார்.
அதன்படி ஒரு பிளாட் 8250 ஸ்கொயர் feet வீதம் இரண்டு பிளாட்டும் சேர்த்து மொத்தம் 16500 ஸ்கொயர் feet இருக்கிறது. அதற்கு தான் நயன்தாரா தற்போது பல கோடி செலவு செய்து ஆடம்பர வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்.
வீட்டின் பிரமாண்டம்
அந்த வீட்டின் உட்புற அமைப்பு மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இதற்காகவே நயன் மும்பையில் இருந்து பிரபல கம்பெனி ஒன்றை பிரத்யோகமாக வரவழைத்திருக்கிறார்.
இவர்கள் இதற்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீட்டை பிரம்மாண்டமாக வடிவமைத்து கொடுத்தவர்கள்.
ஆச்சரியம்
அதைப்போலவே நயன்தாராவின் வீடு பல வசதிகளுடன் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் மட்டுமே தியேட்டர், ஜும் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளதாம்.
அதுமட்டுமின்றி பாத்ரூம் மட்டுமே கிட்டத்தட்ட 1500 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கிறதாம். இதைக்கேட்ட பிரபல தொழிலதிபர்களே வியந்துபோயுள்ளார்களாம்.
பலரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் நயன்தாரா கட்டிக் கொண்டிருக்கும் அந்த வீட்டை பற்றி தான் தற்போது திரையுலையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விட்டால் இந்த ஜோடி அம்பானிக்கே டஃப் கொடுப்பார்கள் போல, விரைவில் வீட்டிற்கு குடியேறுவார்கள் என கூறுகின்றனர்.