நயன்- விக்கியின் போயஸ் கார்டன் சொகுசு இல்லம்: இத்தனை கோடியா?
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தற்போது தமிழகத்தின் மிகவும் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்றான சென்னை போயஸ் கார்டனில் சொகுசு டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்ராரா - விக்கி
தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள். நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

தயானபிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

சொகுசு இல்லம்
இந்நிலையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் விக்னேஷ் சிவன் புதிதாக போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான duplex apartment ஒன்றை வாங்கியுள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 31.5 கோடி என குறிப்பிடப்படுகின்றது.

இந்த வீடு சென்னையின் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள 'லெகசி' என்ற பிரீமியம் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த டூப்ளக்ஸ் வீடு ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 4வது மற்றும் 5வது தளங்களில் அமைந்துள்ளது. இது சுமார் 14,369 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளதாம்.
போயஸ் கார்டனில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மற்றும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா போன்ற பல முக்கிய பிரமுகர்களின் சொகுசு இல்லங்களும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |