நெப்போலியன் சம்பந்தி எங்கு படித்திருக்கிறார் தெரியுமா? பேட்டியில் சிக்கிய தகவல்
நெப்போலியன் சம்பந்தி எங்கு படித்திருக்கிறார் என்ற விவரங்களை பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் நெப்போலியன்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் நெப்போலியன்.
இவர், “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் இருந்த காலப்பகுதியில் கதாநாயகராகவும் மட்டுமல்லாது முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார்.
அதிலும் குறிப்பாக ரஜினிகாந்துக்கு வில்லனாக அவர் நடித்த “எஜமான்” திரைப்படம் நெப்போலியனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களில் கிராமத்து நயாகனாக நடித்திருந்தார்.
இதற்கிடையில், நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
நெப்போலியன் மருமகள் பற்றிய சர்ச்சை
இந்த நிலையில், தனுஷுக்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் கடந்த வருடம் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தனுஷ்- அக்ஷயா திருமணம் முடிந்து சுமாராக 6 மாதங்கள் ஜப்பானில் வசித்து வந்தார்கள். அதன் பின்னர் தற்போது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்று விட்டனர். இருந்த போதிலும் தனுஷ்- அக்ஷயா பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், அக்ஷயா டயரியில் ஏதோ எழுதி வைத்து விட்டு இந்தியாவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்தளவு உண்மை என தெரியவில்லை.
இது ஒரு புறம் இருக்கையில், தற்போது அக்ஷயாவின் பெற்றோர்கள் கொடுத்த பேட்டியொன்றும் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில், நெப்போலியனின் சம்பந்தி மும்பையில் படித்ததாகவும், அவர் 9ஆம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளும் அவருக்கு பேச தெரியும் எனவும் கூறியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த பலரும் அவரின் தைரியத்திற்கு தங்களின் ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |