நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிந்த விவகாரம்: திருநங்கை வைஷு வெளியிட்ட வீடியோ வைரல்!
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாஞ்சில் விஜயன்
விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக, பெண் வேடமிட்டு நகைச்சுவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, மேடைப் பேச்சுகள் மற்றும் சொந்த தொழில் என தொடர்ந்து பிஸியாக இயங்கி வந்தார்.
இந்த நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

மனைவியை பிரிந்ததாக நாஞ்சில் விஜயன் பதிவு
நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மனைவியைப் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், திருநங்கை சகோதரி வைஷ்ணவி தொடர்பாக தன்னைப் பற்றியும் தனது மனைவியையும் இணைத்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தனது மனைவி தன்னுடன் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டை காரணமாக தற்போது மனைவியைப் பிரிந்துவிட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

இதனிடையே, நாஞ்சில் விஜயன் தொடர்பாக திருநங்கை வைஷுலிசா கடந்த காலத்தில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் மனைவியைப் போல அவருடன் வாழ்ந்ததாகவும் வைஷுலிசா முன்பு புகார் அளித்திருந்தார்.இந்த விவகாரம் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
நாஞ்சில் விஜயனுக்கு வைஷுலிசா பதிலடி
இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தனது மனைவியைப் பிரிந்தது தொடர்பாக வெளியிட்ட பதிவுக்கு வைஷுலிசா தற்போது பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “என்னுடைய சாபத்தால்தான் மனைவியைப் பிரிந்துவிட்டேன் என்று கூறுகிறார். ஆனால், கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடினேன்.

கணவன்-மனைவி இருவரும் பிரிய வேண்டும் என்று நான் ஒருபோதும் சாபமிடவில்லை” எனக் கூறியுள்ளார். மேலும், தான் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றதும், நாஞ்சில் விஜயனிடம் தனது தரப்பில் கேட்டதும், அனைத்துமே அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் இருவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை” என்றும் வைஷுலிசா தனது காணொளியில் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் விஜயனின் இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் அதற்கு வைஷுலிசா அளித்துள்ள இந்த பதில் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |