நாகர்கோவில் காசியும் தந்தையும் சேர்ந்து செய்த லீலைகள்.. 120 பெண்கள் 1900 படம் - சிபிசிஐடியின் புதிய அதிரடி!
பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி இதுவரை 120 பெண்களை ஏமாற்றியுள்ளதாக அறிக்கை தாக்கல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநில பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் குண்டர் சட்டத்தில் கைதானவர் காசி.
இதன் பின்னர், காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், இந்த கொடிய சம்பவத்தில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
காசியின் தந்தை மனு தள்ளுபடி
இந்நிலையில், காசியின் லேப்டாப்பில் அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருப்பதை அறிந்த அவரது தந்தை தங்கபாண்டியன் அவற்றை எல்லாம் அழிக்க முயற்சி செய்துள்ளார்.
அவரையும் கைது செய்த நிலையில் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 முறை ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும், காசியின் தந்தையை தவிர அந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியதும் 395 நாட்கள் சிறையிலிருப்பதால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் 4வது முறையாக கன்னியாகுமரி நீதிமன்றத்தில் மனு கூறிய தங்கபாண்டியன், மனுவை விசாரிக்கையில் காசி அவரை கைது செய்வதற்கு முன்பு வரை 120 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றியுள்ளார்.
மேலும், அவரது தந்தை அழிக்க முயற்சித்த லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்களும் 1900 ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனால் தங்கப்பாண்டியன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.